Thursday, March 19, 2009

நாராதீய புராண சங்கைத் தெளிவு



ஆல்காட் , ஜான் ரத்தினம் இருவருடைய தோழமையினால் பண்டிதரின் சிந்தனை விசாலமடைந்தது .தமிழின பூர்வக்குடிகள் ஏன் தீண்டத்தகாதவர்களாக ஆனார்கள் ? என்ற தேடுதலால் ஊருஊராயி சுற்றித்திருந்தார். அப்போதுதான் "நாராதீய சங்கைத் தெளிவு " எனும் ஓலைச்சுவடி கிடைத்தது. அதில் பவுத்தர்கள் எப்படி தீண்டத்தகாதவர்களாக ஆனார்கள் என்பதையும் சாதி பேத விவரங்களையும் விவரித்திருந்தது. அதன் 570 பாக்களையும் படித்துவிட்டு , தன் நெடிய ஆராய்ச்சியின் விளைவாக பவுத்தத்தின் அடிப்படையை தாம் வந்தடைந்ததாக பண்டிதர் குறிப்பிடுகிறார்.

நீலகிரியில் ஏற்கனவே ஒடுக்கப்பட்டோரை ஒருங்கிணைத்து "திராவிட மகாஜன சபை " யை 1890 இல் துவக்கி நடத்தினார் . திராவிட மகாஜன சபையின் சார்பாக ஒரு மாநாட்டை ௦01-12-1891 இல் ஊட்டியில் நடத்தினார்

இதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றி காங்கிரஸ் செயலாளருக்கும் பிரிட்டிஷ் அரசுக்கும் அனுப்பட்டது.

அத்தீர்மானங்கள்:



  1. பறையர் எனக் கூறுவது அவதூறு, குற்றம் என சட்டம் இயற்றவேண்டும்

  2. கல்வி வசதி வேண்டும்

  3. கல்வி உதவித் தொகை அளிக்கவேண்டும்

  4. கல்வி கற்றவர்களுக்கு அரசு வேலை

  5. உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம்

  6. பொது இடங்களில் நுழைய உரிமை

  7. அரசு அலுவலகங்களில் நுழைய அனுமதி

  8. கிராம முன்சீப் பதவி

  9. கிராம புறம்போக்கு தரிசு நிலங்கள் வழங்கவேண்டும்

  10. சிறைச்சாலை சட்டம் 464 பிரிவை நீக்குதல்

1892 ஏப்ரல் மாதம் சென்னை விக்டோரியா அரங்கில் நடைபெற்ற சென்னை மகாஜன சபை மாநாட்டில், நீலகிரி பிரதிநிதியாக பண்டிதர் கலந்துகொண்டார் .இம்மாநாட்டில்தான் ஒடுக்கப்பட்டோருக்கு இலவச கல்வி ,புறம்போக்கு தரிசு நிலம், வேலைவாய்ப்பு போன்ற கோரிக்கைகளை முன்வைத்தார். இறைவனை வழிபட கோவிலுக்குள் நுழைய அனுமதி கேட்டபோது, அரங்கத்தில் உள்ள அனைவரும் எழந்து நின்று " அந்த பறையனை வெளியே துரத்துங்கள் " என சத்தம் போட்டார்கள் . பண்டிதருக்கு ஒரே அதிர்ச்சி. நாங்கள் இந்துக்கள் தானே ஏன் கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கிறீர்கள் என திரும்பத்திரும்ப கோபமாக கேட்டார். "உங்களுக்குத்தான் முனியாண்டி, காளியாத்தா , மாரியாத்தா இருக்க்கே அதை கும்பிடுங்கோ " என்று சொல்லி பண்டிதரை மாநாட்டைவிட்டு விரட்டிவிட்டனர். பண்டிதர் கடும் கோபத்தோடு ஊர் திரும்பினார்








No comments:

Post a Comment